ஆப்நகரம்

வேலூர் வந்த முதல்வர் ஸ்டாலின்... 32 கோடியில் காத்திருக்கும் புதிய திட்டங்கள்!

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 29 Jun 2022, 7:10 pm

ஹைலைட்ஸ்:

  • வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 53 .13 கோடி மதிப்பில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்
  • பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • 30,423 பயனாளிகளுக்கு 360 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூபாய் 53.13 கோடி மதிப்பில் 25 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை துவக்கி வைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள இப்பேருந்து நிலையத்தில் 54 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் 78 தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி,‌ தொலைக்காட்சி, தீ எதிர்ப்பு சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து ஊழியர்கள் தங்கும் அறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், 52 கிலோ வாட் மின்சாரம் கிடைக்கக்கூடிய சோலார் மின் தகடு மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு கழிவரைகள் உள்பட, ஆண், பெண் இருபாலருக்கும் சுமார் 100 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌ இன்று மாலை நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சுமார் 62 கோடியே 10 லட்சத்தில் முடிவுற்ற 17 திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

ராணிப்பேட்டை நகராட்சி கூட்டம்... முட்டிக்கொண்ட திமுக, அதிமுக!

32 கோடியே 89 லட்சம் மதிப்பில் 50 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பல்வேறு துறை சார்பில் 30,423 பயனாளிகளுக்கு 360 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி