ஆப்நகரம்

பிரசவத்திற்கு விடுப்பு எடுத்த மாணவி… தேர்வுக்கு மறுக்கும் கல்லூரி நிர்வாகம்!

ராணிப்பேட்டையில் பிரசவத்திற்கு விடுப்பு எடுத்த கல்லூரி மாணவியை தேர்வு எழுத அனுமதிக்காததால் கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Jun 2022, 4:34 pm
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காமாட்சி என்ற மாணவி (B.A.Tamil) இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
Samayam Tamil Ranipet College student


திருமணமான அந்த மாணவி கருவுற்றிருந்ததால் கடந்த சில மாதங்களாக பிரசவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், செமஸ்டர் தேர்வு நடைபெறுவதால் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பாதுகாவலருடன் கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்றுள்ளார்.

அப்போது, கல்லூரி நிர்வாகம் நீண்ட விடுப்பில் இருந்ததை காரணம் காட்டி காமாட்சியை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மாணவி காமாட்சி தனது கைக்குழந்தையுடன் கல்லூரிக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் தர்ணாவில் ஈடுபட்ட மாணவியிடம் பேராசிரியர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், தேர்வு எழுத அனுமதி வழங்கினால் மட்டுமே அங்கிருந்து நகருவேன் என அடம் பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி