ஆப்நகரம்

வேலூரில் வேகம் எடுக்கும் கொரோனா; ஒருநாளில் இத்தன பேருக்குன்னா எப்படி?

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரக்கூடிய நிலையில் வேலூரில் கொரோனாவால் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.

Samayam Tamil 12 May 2021, 11:30 am
வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதியதாக 734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 32 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை 32,543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்


இதுவரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 442 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி சுடுகாடாக மாறும்; ஆரூடம் சொல்கிறார் நாராயணசாமி!

மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி