ஆப்நகரம்

2 சப்.இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா!

போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Samayam Tamil 23 Apr 2021, 9:08 am
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே சிறப்பு மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil காவல் துறை
காவல் துறை


ஆனாலும் நேற்று வெளியான முடிவில் மாவட்டம் முழுவதும் 336 பேருக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஒரே மாவட்டத்தில் ஒரு நாளில் 7 பேர் பலி; மக்கள் அச்சம்!

இவர்களில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட 28 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி