ஆப்நகரம்

குடிநீர் குழாய் உடைந்து வேலூரில் வெள்ளம்: இதுதான் அதிகாரிகள் வேலை பார்க்கும் லட்சணமா?

வேலூர் கோட்டை பின்புறம் மக்கான் சிக்னல் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல மணி நேரம் குடிநீர் வீணாக வெளியேறி ரோட்டில் சென்ற போதும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Samayam Tamil 2 Aug 2021, 5:11 pm
வேலூர் மக்கான் சிக்னல் பகுதியிலிருந்து எம்ஜிஆர் நகர், கொணவட்டம் ஆகிய பகுதிகளுக்கு பைப் லைன் வழியாக கார்ப்ரேஷன் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச்சூழலில் வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிக்குத் தோண்டப்பட்ட இடத்தில் குடிநீர் பழுப்பு உடைந்து இருக்கிறது.
Samayam Tamil குடிநீர் குழாய் உடைந்து வேலூரில் வெள்ளம்: இதுதான் அதிகாரிகள் வேலை பார்க்கும் லட்சணமா?


இதனைக் கவனிக்காமல் தோண்டப்பட்ட இடத்தை அப்படியே மூடிவிட்டுச் சென்றுள்ளனர் பணியாளர்கள். இந்த நிலையில், கொணவட்டம் பகுதிக்குத் தண்ணீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாகத் தண்ணீர் வீணாக ரோட்டில் சென்று கொண்டிருந்தது. சாலையில் தண்ணீர் மழைவெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த ஊரு மருத்துவமனை; மத்திய அரசு சூப்பர் விருது!
இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் உடைந்த பைப் லைனை சரிசெய்யாமல் இருப்பதாகவும், இதனால் குடிநீர் முறையாகச் செல்லவேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி