ஆப்நகரம்

லவ் டார்ச்சர்... ஃபினாயிலை குடித்த இளம்பெண்... தலைமறைமான காதலனை தேடும் போலீஸ்!

ஆரணி அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் போட்டோவை எடிட் செய்து சமூகவலைதளத்தில் பரப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 20 Jan 2021, 8:46 pm
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மோட்டுகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் சந்தியா(21). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
Samayam Tamil லவ் டார்ச்சர் -போலீஸ் தேடும் இளைஞர் கோதண்டராமன்
ஒருதலையா காதலித்த இளம்பெண்ணை லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது


பக்கத்து ஊரான தெள்ளுர் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன் என்ற இளைஞர் சந்தியாவை ஒருதலையாக கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். கோதண்டராமனை சந்தியா காதலிக்கவில்லை.

தன்னை காதலிக்குமாறு கோதண்டராமன் சந்தியாவை வற்புறgத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கோதண்டராமன், சந்தியாவின் போட்டோக்களை இருவரும் இணைந்திருப்பதை போன்று எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி சந்தியா சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய போட்டோக்களை பார்த்து சந்தியாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காதலனை வெட்டி கிணற்றில் வீசிய காதலி... வாணியம்பாடியில் பயங்கரம்

இதனை அறிந்த கோதண்டராமன் கடந்த 17ஆம் தேதி இரவு குடிபோதையில் சந்தியாவின் வீட்டிற்குச் சென்று நீ என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மனமுடைந்து போன சந்தியா செய்வதறியாமல் வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஃபினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

அதனைக் கண்ட பெற்றோர் சந்தியாவை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அஙு்கு சந்தியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டாக மூழ்கிய இளைஞர்: தேசிய பேரிடர் குழு வந்து உடலை எடுத்தது!

இதைத்தொடர்ந்து சந்தியாவின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோதண்டராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

புகார் செய்து இருப்பதை அறிந்த கோதண்டராமன் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கோதண்டராமன் தேடி வருகின்றனர்

அடுத்த செய்தி