ஆப்நகரம்

கலெக்டர் அலுவலகம் அருகே கொரோனா விதி மீறல்; பிரபல துணிக் கடைக்கு இம்புட்டு ரூபாய் அபராதமா?

வேலூரில் கொரோனா விதி மீறிய துணிக்கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Samayam Tamil 30 Apr 2021, 8:38 am
கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழக அரசு 3 ஆயிரம் சதுரஅடி மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுடைய கடைகள் திறக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து வேலூர் மாநகரில் 50 க்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டன.
Samayam Tamil அபராதம் வசூலிக்கப்படுகிறது.
கொரோனா விதி மீறிய கடையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.


இந்தநிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை தடையை மீறி இயங்குவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது.

புகாரினை தொடர்ந்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகராட்சி 2-வது மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார்,சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெட்ரோல் விலை: இந்த நேரத்துலயும் இப்படியா? அடம் பிடிக்கும் அரசு!

அப்போது, கடையின் முன்பக்கம் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் வாடிக்கையாளர்களை அடித்தளத்தில் இருந்து லிப்ட் (Lift) மூலம் மேல் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டு, விற்பனை நடைபெற்றது தெரியவந்துள்ளது.

மேலும் கடையில் ஊழியர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் விற்பனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கடைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.

உடனடியாக அபராத தொகையாக ஒரு லட்சம் வசூல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இனி வரும் நாட்களில், தடையை மீறி கடையை திறப்பது தெரிய வந்தால், சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.

அடுத்த செய்தி