ஆப்நகரம்

கே.சி.வீரமணி மூக்கு கண்ணாடி ரசீது; சிரிப்பாய் சிரிக்கும்..சமூக வலைதளம்!

லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் தனது மூக்கு கண்ணாடி ரசீதை எடுத்து சென்றுவிட்டதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பேட்டியை சமூக வலைதளவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

Samayam Tamil 20 Sep 2021, 3:00 pm
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, காந்திநகர் பகுதியில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் ஆகியோரின் குடியிருப்புகளை உள்ளடக்கிய பெங்களூருவில் 2 இடங்கள் மற்றும் சென்னையில் 6 இடங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.
Samayam Tamil முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி  பேட்டி
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி


அதிகாலை முதல் தொடர்ந்த சோதனையில் தற்பொழுது வரை தோராய மதிப்பாக சுமார் 34 லட்சம் ரொக்க பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7.6 கிலோ வெள்ளி பொருட்கள், 1.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் ஐந்து கணினிகள் ஹார்ட் டிஸ்க்குகள், 275 யூனிட் மணல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காரணமாக திருப்பத்தூர் தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கே.சி.வீரமணி கூறியதாவது:

கடந்த 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 3 மணி அளவில் பல பொருட்களை கைப்பற்றியதாக பொய்யான தகவல் அறிக்கையை வெளியிட்டனர்.

கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி; அமைச்சர் அதிர்ச்சி தகவல்!

ஆனால் எனது வீட்டில் 300 சவரன் மதிப்பிலான தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் மின்சார கட்டண ரசீது, மூக்கு கண்ணாடி ரசீது மற்றும் மணல் ரசீது என சொற்ப அளவிலேயே எடுத்து சென்றனர்.

பள்ளி மாணவர்களை தொற்று பாதிக்காது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் புது குண்டு!

ஆனால் தங்க நகைகளை கூட தேர்தல் பிரமாண பத்திரத்தில் அதைவிட அதிகமாக கொடுத்திருந்தால் நகைகளை என்னிடமே திருப்பி கொடுத்துவிட்டனர். வீட்டில் இருக்கும் மணலுக்கு கூட முறையாக ரசீது பெற்றுள்ளேன்.

சினிமாவை மிஞ்சும் தில்லாலங்கடி காதல்; ஒரே வீட்டில்..12 ஆண்டாக ரகசிய குடும்பம்!

அதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்தி உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த பத்திரிகை குறிப்பு முற்றிலும் பொய்யானது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

அடுத்த செய்தி