ஆப்நகரம்

திருப்பத்தூர்: அரசு பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அரசு பட்டுப்பூச்சி அலுவலகம் அருகே ஓசூரில் இருந்து வந்த அரசு பேருந்தும், திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Samayam Tamil 27 Feb 2022, 5:31 am
தருமபுரி அரசு போக்குவரத்து மண்டலத்திற்கு உட்பட்ட அரசு பேருந்தை குரும்பேரியை சேர்ந்த ஓட்டுநர் சரவணன் ஓட்டி வந்தார். பேருந்து தாதம்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் நடத்துனராக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil Tirupattur Accident


ஓசூரில் இருந்து சுமார் 80 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அருகே உள்ள அரசு பட்டுப்பூச்சி அலுவலகம் எதிரில் வந்த பொழுது எதிரே சென்று கொண்டிருந்த டிராவல்ஸ் வாகனம் திடீரென வேகத்தைக் குறைத்து நிற்பதற்கு முயன்றதாக தெரிகிறது.

இதனால் பதட்டமடைந்த பேருந்தின் ஓட்டுநர் சரவணன் டிராவல்ஸ் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக பேருந்தை வலது பக்கமாக திரும்பி உள்ளார். அப்போது எதிர்திசையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் அரவிந்த்ராஜ் (24) லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியை நோக்கி வந்து கொண்டிருந்ததை கவனிக்காமல் விட்டதால் எதிர்பாராதவிதமாக பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகின.

ஆனால், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சுமார் 80க்கும் மேற்பட்ட பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் மற்றும் லாரியின் ஓட்டுனர் அனைவரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் சேதம் ஏதும் இன்றி தப்பினர்.

சிறு சிறு காயமடைந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பயணிகளை 108 ஆம்புலன்ஸில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறை விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி