ஆப்நகரம்

10.5% இடஒதுக்கீடு சட்டத்தை திரும்ப தாங்க… அரசு பேருந்தின் கண்ணாடியை நொறுக்கிய பாமகவினர்!

வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வேலூரில் பாமகவினர் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தனர்.

Samayam Tamil 2 Nov 2021, 10:27 pm
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இந்த சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
Samayam Tamil Vellore PMK News
பாமக போராட்டத்தில் உடைக்கப்பட்ட அரசு பேருந்து


இதனை எதிர்த்தும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தக்கோரியும் பா.ம.கவினர் நேற்று முதலே வட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் பா.ம.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டம் முடிந்த நிலையில். கே.வி.குப்பம் அடுத்த பில்லாந்திப்பட்டு பகுதியில் குடியாத்தத்தில் இருந்து காட்பாடி சென்ற அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் எறிந்ததில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


தொடர்ந்து, இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி மற்றும் கே.வி.குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி