ஆப்நகரம்

பள்ளிகள் திறப்பு: கிருமிநாசினி கொடுத்து மாணவிகளை வரவேற்ற திருப்பத்தூர் பள்ளி நிர்வாகம்!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் மாணவ மாணவிகள் வருகை புரிந்தனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 13 Jun 2022, 12:00 pm

ஹைலைட்ஸ்:

  • கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறப்பு.
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் மாணவ மாணவிகள் வருகை புரிந்தனர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பள்ளி திறப்பு
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை நேற்றோடு முடிந்த நிலையில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 977 பள்ளிகள் உள்ளது. இதில் 1ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி, அரசு நிதிஉதவி பள்ளி, மெட்ரிக் பள்ளி என அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதில் அரசு துவக்கப்பள்ளி ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, என அரசு நிதியுதவி பள்ளி தனியார் பள்ளி பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் இன்று வருகை தந்தனர். மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் உற்சாகமுடன் வருகை தந்தனர் அவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் மகிழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்து இனிப்புகளை வழங்கி வரவேற்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்களால் முக கவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாணவ மாணவியர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பு வகுப்பறையில் அனுமதிக்க பட்டனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி