ஆப்நகரம்

நாய்களிடம் சிக்கிய ஆந்தை; களம் இறங்கிய காக்கைகள்!

வேலூரில் ஆந்தை ஒன்று நாயிடம் சிக்கியதை பார்த்து காக்கைகளும் களம் இறங்கின.

Samayam Tamil 21 Apr 2021, 11:51 am
வேலூர் மாவட்டம் அண்பூண்டி தேசிய நெடுஞ்சாலையோரம் கண்டெய்னர் லாரியில் அடிபட்டு 2 நாட்கள் ஆன ஆந்தை ஒன்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதை பார்த்த நாய்கள் ஆந்தையை கடிக்க சுற்றிவளைத்துக்கொண்டு இருந்தன. உடனே காக்கை கூட்டமும் களம் இறங்கி தங்கள் பங்குக்கு ஆந்தையை கொத்தின.
Samayam Tamil மீட்கப்பட்ட ஆந்தை.
நாய், காக்கைகளிடம் இருந்து ஆந்தை மீட்பு


4 நாளில் ஒரே வீட்டில் 4 மரணம்!

இதனை பார்த்த அவ்வழியாக சென்ற இளைஞர்கள் தாவி சென்று ஆந்தையை மீட்டு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் வேலூர் சரக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சாக்கு மூட்டையில் இளம்பெண் சடலம்; அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா?

தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்க்கு வந்த வேலூர் வனச்சரகம் அணைக்கட்டு பிரிவை சேர்ந்த வனக்காப்பாளர் ஆனந்தகுமார் ஆந்தையை பெற்றுக்கொண்டார். பின்னர் அதற்கு முதலுதவி அளித்து, வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

அடுத்த செய்தி