ஆப்நகரம்

ஒரே மாவட்டத்தில் ஒரு நாளில் 7 பேர் பலி; மக்கள் அச்சம்!

ஒரே மாவட்டத்தில் ஒரு நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.

Samayam Tamil 23 Apr 2021, 8:46 am
வேலூர் மாவட்டத்தில் தொற்று பரவல் ஒருபுறம் அதிகரிக்க மற்றொருபுறம் இறப்பும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil கொரோனா மரணத்தை விளக்கும் படம்.
கொரோனா மரணத்தை விளக்கும் படம்


வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர்.

அந்தவகையில் மேற்கு வங்க மாநிலம் அகிராம்முசார்பாத் பகுதியை சேர்ந்த ரபியுள் (37) என்பவர் வேலூருக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மது பிரியர்கள் கவனத்துக்கு: டாஸ்மாக் நேரத்தை மாற்றியமைக்க கோரிக்கை!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பாப்பனாம்பட்டு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா (38). இவர் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சவுகார்தெருவை சேர்ந்த ஷபீர்அகமத் (70) கடந்த 19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், மெல்லபாடி பகுதியை சேர்ந்த நோபோமி ஜோசப் (78) என்ற மூதாட்டி கடந்த 17ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

உத்திரபிரதேச மாநிலம் பெல்பர்பூர் வாரணாசி பகுதியை சேர்ந்த சரோஜ்வர்மா (42) என்ற பெண் கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் பி.டி.ஆர் நகரை சேர்ந்த விஜயரகுநாதன் (50) நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இவர்கள் இறந்தனர்.

கொரோனாவை விட கொடூர மரணம்; காலை எழுந்தவுடன் இப்படியொரு அதிர்ச்சி!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹிர்பிரி ராஞ்சி பகுதியை சேர்ந்த ஜீனர்பர்வீன் (40) என்ற பெண் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து பலியானோரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால், இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி