வேலூர் மாவட்டம், காட்பாடி மார்கமாக செல்லும் பயணிகள் இரயிலில் கஞ்சா கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில், டாடா நகரில் இருந்து இருந்து எர்ணாகுளம் வரை செல்லும் பயணிகள் விரைவு ரயிலில், சென்னை ரயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் மூன்று பைகளில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் கஞ்சா கடத்தி வந்த கோயம்பத்தூர் மாவட்டம் ரத்னகுடி பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவரை கைது செய்து, வேலூர் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் காவலர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
ராமதாஸ் கண் அசைத்தால்...தமிழ்நாடு தாங்காது- பாமக நிர்வாகி பரபரப்பு பேட்டி!
இன்று அதிகாலை 3 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த தன்பாத் எக்ஸ்பிரஸில் வந்த ஒடிசா மாநிலம் சுந்தர் காட் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தன் சத்ராவின் மகன் பசந்த் சத்ரா (25) என்கிற வாலிபரை, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர்.
அவரிடம் எட்டு சிறுசிறு மூட்டைகளில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் காவலர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
ராமதாஸ் கண் அசைத்தால்...தமிழ்நாடு தாங்காது- பாமக நிர்வாகி பரபரப்பு பேட்டி!
இன்று அதிகாலை 3 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த தன்பாத் எக்ஸ்பிரஸில் வந்த ஒடிசா மாநிலம் சுந்தர் காட் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தன் சத்ராவின் மகன் பசந்த் சத்ரா (25) என்கிற வாலிபரை, சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர்.
அவரிடம் எட்டு சிறுசிறு மூட்டைகளில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.