ஆப்நகரம்

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை!

வேலூர் நகரில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Dec 2021, 12:05 pm
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணிவரை செயல்பட்ட கடையை கடை ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இரவு காவலர்கள் இருவர் பணியில் இருந்துள்ளனர்.
Samayam Tamil vellore jos alukkas theft
கோப்புப்படம்


நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு முதல் தளத்தில் ஒரு கும்பல் கொள்ளையை அறங்கேற்றியுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், அதன் மதிப்பு குறித்த விபரங்கள் இன்னும் வெளிடப்படாத நிலையில், கொள்ளை நடந்த இடத்தில் வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் மற்றும் டிஐஜி ஆகியோர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஏற்கனவே திருச்சி லலிதா நகைக்கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ள அறங்கேற்றப்பட்ட நிலையில் அந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து போலீசார் நகைகளை பறிமுதல் செய்த நிலையில், மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி