ஆப்நகரம்

வாக்கு எண்ணும் மையத்தில் துரைமுருகன் கலவரம் செய்ய திட்டம்: வேலூரில் பதற்றம்!

திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளர்கள் வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 28 Apr 2021, 6:06 pm
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ துரைமுருகன் போட்டியிடுகிறார். துரைமுருகனை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் வி. ராமு களமிறங்கியிருக்கிறார். இத்தொகுதியில் பதிவான வாக்குகள் காட்பாடி அரசு சட்டக்கல்லூரியில் மே 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
Samayam Tamil வாக்கு எண்ணும் மையத்தில் துரைமுருகன் கலவரம் செய்ய திட்டம்: வேலூரில் பதற்றம்!


இந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் சேர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டிருப்பதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

புகார் மனுவில், “காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி மிகப் பிரகாசமாக இருக்கிறது. இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்தி வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் அல்லது வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்த வேண்டும் என திமுக வேட்பாளர் துரைமுருகன், அவரது மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த்தும் தனது ஆதரவாளர்களிடம் பேசியிருந்தது எங்களுக்குத் தெரிய வந்தது.

நளினி-முருகன் சந்திப்பு நடக்குமா?; சிறை துறை விளக்கம்!

எனவே, இந்த சூழலை கருத்தில் கொண்டு காட்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். முகவர்கள் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே மையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். குறிப்பாக வாக்கு எண்ணும் மையத்தில் கலவரத்தை ஏற்படுத்துவார்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி