ஆப்நகரம்

காட்பாடி காட்ஃபாதர் துரைமுருகன் அழுதே இந்த முறை வெற்றி?: களநிலவரம் சொல்வது என்ன?

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில் நட்சத்திர தொகுதியாகப் பார்க்கப்படுவது காட்பாடி சட்டமன்றத் தொகுதி. காரணம் திமுக துரைமுருகன்.

Samayam Tamil 24 Mar 2021, 11:23 am
எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளருமான துரைமுருகனின் சொந்த தொகுதி காட்பாடி. இதனாலே “காட்பாடி தொகுதியின் காட்பாதர்” எனக் கட்சியினர் அழைப்பர். அந்த அளவிற்கு துரைமுருகன் செல்வாக்கு காட்பாடியில் உள்ளது.
Samayam Tamil காட்பாடி காட்ஃபாதர் துரைமுருகன் அழுதே இந்த முறை வெற்றி?: களநிலவரம் சொல்வது என்ன?


அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து அரசியல் பயணத்திலிருந்து வரும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பத்தாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ராமு களம் இறக்கப்பட்டுள்ளார். தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாத நபரை அதிமுக வேட்பாளராக இறங்கியிருப்பது அதிமுகவுக்குப் பாதகம் என்கிறது கள நிலவரம்.

தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த எம்.பி. திடீர் மரணம்... அதிமுகவினர் அதிர்ச்சி!

துரைமுருகன், பிரச்சாரத்தின்போது “இந்த ஒரு முறை என்னை ஜெயிக்க வைத்து விடுங்கள், உங்களுக்கான அனைத்தையும் நான் செய்கிறேன். எனக்காகக் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” எனக் கண்ணீர் சிந்தி செண்டிமெண்டாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அடுத்த செய்தி