ஆப்நகரம்

வேலூர் ஆட்சியர் இருக்கையில் கோவை கமிஷ்னர் குமரவேல் பாண்டியன் அமருகிறார்!

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது தொடர் கதையாகியுள்ளது.

Samayam Tamil 13 Jun 2021, 10:21 pm
தமிழ்நாட்டில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள திமுக அரசு நிர்வாக ரீதியாகத் தொடர் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil வேலூர் ஆட்சியர் இருக்கையில் கோவை கமிஷ்னர் குமரவேல் பாண்டியன் அமருகிறார்!


அதன்படி வேலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த சண்முகசுந்தரம் ஐஏஎஸ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியராக 2 வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருபவர் சண்முக சுந்தரம். 2011ஆம் ஆண்டு வருவாய்க் கோட்டாட்சியராகப் பயணத்தை தொடங்கிய இவர், மாவட்ட வருவாய் அலுவலர், பவானி சாகர் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பயிற்சி நிலையத்தின் முதல்வராக இருந்துள்ளார்.

அதிரடி காட்டிய கலெக்டர் திடீர் பணியிடம் மாற்றம்; இவ்வளவு பவர்புல்லான அதிகாரத்துக்கா போகிறார்?
அதைத் தொடர்ந்து சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தின் கூடுதல் இயக்குநர், சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.

2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியில் அமர்ந்தார். இந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூட்டுறவுச் சங்க பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கோவை மாவட்ட கமிஷ்னராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி