ஆப்நகரம்

திருவண்ணாமலை ஏடிஎம்களில் நடந்த தொடர் கொள்ளை; முக்கிய குற்றவாளி ஹரியானாவில் துப்பாக்கி முனையில் கைது..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடர்ந்து நான்கு ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி ஹரியானா மாநிலத்தில், துப்பாக்கி முனையில் திருவண்ணாமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 May 2023, 8:30 am

ஹைலைட்ஸ்:

  • ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய முதல் குற்றவாளி கைது
  • 15 லட்சம் ரூபாய், இரண்டு கார்கள் பறிமுதல்
  • இதுவரை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 20 லட்சம் பணம், 3 கார்கள் ஒரு கண்டெய்னர் லாரி பறிமுதல்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருவண்ணாமலை ஏடிஎம்களில் நடந்த தொடர் கொள்ளை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடர்ந்து நான்கு ஏடிஎம்களில் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஹரியானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் திருவண்ணாமலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய முதல் குற்றவாளி ஆசிப் ஜாவேத் கைது:

ஏடிஎம்களில் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய முதல் குற்றவாளி ஆசிப் ஜாவேத் அரியானா மாநிலத்தில் திருவண்ணாமலை தனிப்படை போலீசாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஏடிஎம்களில் நடந்த தொடர் கொள்ளை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தொடர்ந்து நான்கு ஏடிஎம் மையங்களில் கேஸ் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ரூபாய் 72 லட்சத்து 79 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, அரியானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன் அடிப்படையில் இதுவரை எட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 5 லட்சம் பணமும், ஒரு கார், ஒரு கண்டெய்னர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

துப்பாக்கி முனையில் தனிப்படை அதிரடி:

இந்த நிலையில் முதல் முக்கிய குற்றவாளியை தேடும் பணியில் திருவண்ணாமலை மாவட்ட தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய ஆய்வாளர் புகழ் தலைமையில் ஆறு துணை ஆய்வாளர்கள் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டிருந்தனர்.

குடியாத்தம் அருகே அடுத்தடுத்து நான்கு வீடுகளில் கொள்ளை.. மர்ம நபர்கள் கைவரிசை.. போலீசார் தீவிர விசாரணை!

முக்கிய முதல் குற்றவாளியான ஆசிப்ஜாவேத் அரியானா மாநிலத்தில் ஆரவல்லி மலைப்பகுதிக்கு இடையே பாழடைந்த கட்டடத்தில் மறைந்திருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த ஒரு வாரமாக போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

ஈரோடு கட்டிடத் தொழிலாளி கொலை வழக்கு; மேலும் இரண்டு பேர் கைது.. தனிப்படை அதிரடி!

பல்வேறு சவால்களுக்கிடையே போலீசார் அந்த கட்டிடத்தில் மறைந்து இருந்து முக்கிய குற்றவாளியான ஆசிப்ஜாவேத்-ஐ துப்பாக்கி முனையில் கைது செய்து, அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாய் 2 கார், பறிமுதல் செய்தனர்.

20 லட்சம் பணம், 3 கார்கள் ஒரு கண்டெய்னர் லாரி பறிமுதல்:

திருவண்ணாமலைய மாவட்டத்தில் நடைபெற்ற இந்த ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மூன்று கார்கள், ஒரு கண்டெய்னர் லாரி மற்றும் 20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி