ஆப்நகரம்

கே.சி.வீரமணி பொருட்கள்.... வந்து சேர்ந்த இடம் இதுதான்!

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Samayam Tamil 22 Sep 2021, 8:00 pm
அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரில் அமைச்சர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 15 ஆம் தேதி வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.
Samayam Tamil கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி


அதை தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணி வீடு, அவரது உறவினர்கள், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 623 (சுமார் 5 கிலோ) சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 34 லட்சம் பணம், 7 கிலோ வெள்ளி, 1 லட்சத்து 80 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர், செல்போன், லேப்டான், ஹாட்டிஸ்க் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ரேஷன் கடை விவகாரம்... நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!

இந்த நிலையில் இன்று கே.சி.வீரமணியின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பென்டிரைவ், 20 லட்சம் பணம் போன்றவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

அடுத்த செய்தி