ஆப்நகரம்

வேற லெவலில் தயாராகும் தமிழக சுற்றுலா தளங்கள்; அமைச்சர் மதிவேந்தன் அதிரடி!

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 29 Nov 2022, 5:11 pm
தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலத்தை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தற்போது உள்ள சூழலில் சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அமைச்சர் மதிவேந்தன்


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பாரதி நகரில் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள கட்டடமைப்பு வசதிகள் குறித்தும், தற்போது சூழலுக்கு ஏற்றது போல மாற்றப்பட்டு வரும் பணிகள் குறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், கூறியதாவது: "ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஓட்டலை 70 லட்சம் மதிப்பீட்டில் தற்போது சூழலுக்கு ஏற்றார் போல் புதுபிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்களில் வருடாவருடம் 300 சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து அதில் 15க்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலத்தை சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தற்போது உள்ள சூழலில் சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

புற்றுநோயால் கண்ணை இழந்து தவிக்கும் 4 வயது பெண் குழந்தை; தமிழக அரசு உதவிட பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை!

அதேபோல் ஜவ்வாது மலை, கொல்லிமலை, ஏலகிரி ஆகிய பகுதிகளில் சுற்றுசூழல் முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து ஓவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்புமிக்க இடங்களை கண்டரிந்து சுற்றுலா தலமாக மாற்ற ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி