ஆப்நகரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டைக்கு வருகை: பணிகளை முன் பார்வையிட்ட அமைச்சர்கள்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 118 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடப் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

Curated bySrini Vasan | Samayam Tamil 15 Jun 2022, 5:54 pm

ஹைலைட்ஸ்:

  • ராணிப்பேட்டைக்கு புதிய ஆட்சியர் அலுவலகம்
  • தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சர்கள் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த பாரதி நகர் பகுதியில் ரூபாய் 118 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 20ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
இதன் முன்னேற்பாடு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் கட்டுமானப் பணிகள் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிட பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும

மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ராணிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின் மேடை அமைக்கும் பணியையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி