ஆப்நகரம்

Pinji Lake: ராணிப்பேட்டைக்கு அடித்த ஆஃபர்; பிஞ்சி ஏரியில் படகு இல்லத்துடன் பூங்கா!

ரூபாய் 118.40 கோடி மதிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 30 Jun 2022, 10:39 am

ஹைலைட்ஸ்:

  • ராணிப்பேட்டை CMC மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட ஸ்டாலின்
  • ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்
  • பிஞ்சி ஏரியில் பொழுதுபோக்கு இடமாக மாற்றும் திட்டப் பணி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil CMC  மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட தமிழக முதல்வர்
CMC மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட தமிழக முதல்வர்
ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எம்.சி. மருத்துவமனை கல்லூரியின் ராணிப்பேட்டை கிளையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 25ம் தேதி காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். கடந்த 20ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், நேரில் பங்கேற்று மருத்துவமனை வளாகத்தை திறந்து வைக்கவிருந்த நிலையில்,உடல்நலக்குறவு காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மருத்துவமனையை திறந்து வைத்த நிலையில், வேலூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர், CMC மருத்துவமனையின் ராணிப்பேட்டை கிளையை நேரில் சென்று பார்வையிட்டார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக இரண்டு நாள் சுற்று பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் வந்தடைந்தார்.

ராணிப்பேட்டை நகராட்சி கூட்டம்... முட்டிக்கொண்ட திமுக, அதிமுக!

இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பணிகளை துவக்கி வைத்த அவர், சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் 118.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்காக ராணிப்பேட்டை அடுத்த பாரதிநகர் பகுதியில் சுமார் 13.40 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 28000 சதுர மீட்டர் பரப்பளவில் ரூபாய் 118.40 கோடி மதிப்பில் நான்கு மாடி கட்டிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெருந்திட்ட வளாகத்தில் பணிகளானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது முழுமையாக முடிவடைந்த நிலையில், இதனை தமிழக முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகமானது அனைத்து நவீன வசதிகளுடன் குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு சாய்தள நடைமேடையுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் 70,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி 5 நடைபெற்று முடிந்த பணிகளை தொடங்கி வைக்கும் அவர், ராணிப்பேட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட 24 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கிறார்.
இறுதியாக, பிஞ்சி ஏரியில் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக உருவாக்கப்படவுள்ள படகு இல்லத்துடன் கூடிய பூங்கா அமைக்க 45 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி