ஆப்நகரம்

அரசு அதிகாரி வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

வேலூர் பெருமுகை பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Samayam Tamil 27 Jan 2021, 3:26 pm
வேலூர் மாவட்டம் பெருமுகை அடுத்த வினோத் பாலாஜி தெருவை சேர்ந்தவர் ராஜிவ்(32).இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலதுறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil கொள்ளையடிக்கப்பட்ட வீடு


இவர் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு நேற்று வேலூருக்கு வந்துள்ளார்.அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.

அதனை கண்டு அதிரிந்து போன ராஜிவ் வீட்டின் உள் சென்று பார்த்தபோது பீரோவில் வைக்க பட்டிருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 5 அரை பவுன் நகை , 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள லெனோவா டேப்லெட் திருடு போயுள்ளது தெரிய வந்துள்ளது.

1700 கிலோ வெள்ளியில் விநாயகர் சிலை

தொடர்ந்து ராஜீவ், சத்துவாச்சாரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி