ஆப்நகரம்

வேலூரில் மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா?; அதுவும் கருப்பு பூஞ்சையா? என்ன கொடும சார்!

வேலூர் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட நபர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோயை தடுக்கும் பணியில் வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையினர் மும்முரமாக உள்ளனர்.

Samayam Tamil 27 May 2021, 2:54 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயைத் தடுத்து மக்களை காக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளார். இதன் பலனாக நோய் பரவல் ஓரளவுக்கு குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil கருப்பு பூஞ்சை வைரஸ்
கருப்பு பூஞ்சை வைரஸ்


இந்த சூழலில் தமிழகத்தில் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனும் கருப்பு பூஞ்சை நோயும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலோனோர் உயிர் இழக்கின்றனர். இதில் உயிர் பிழைக்கும் சிலருக்கு கண்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய ஆபத்தான கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு வேலூர் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேலூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் தற்போது 40க்கும் மேற்பட்ட நபர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் உயிர் பிழைத்தேன்; அமைச்சர் துரை முருகன் உருக்கம்!

இவர்களில் 13 நபர்களுக்கு இத்துடன் சேர்த்து கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற போதிலும் பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி