ஆப்நகரம்

தாய், மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை... வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

தாய் மற்றும் அவரது நான்கு வயத பெண் குழந்தை ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Feb 2021, 6:34 pm

ஹைலைட்ஸ்:

  • வேலூர் மாவட்டம் ,விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தாய், மகள் தற்கொலை
  • இந்த தற்கொலை சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விரிஞ்சிபுரம் ரயில் நிலையம்
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் தாய், மகள் தற்கொலை
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் விலாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் மத்திய எல்லை பாதுகாப்புப் படை பிரிவில் (சிஆர்பிஎஃப்) பணிப்புரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெயந்தி (29) மற்றும் நந்திதா என்கின்ற நான்கு வயது பெண் குழந்தை கீழ் விலாச்சூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய் ஜெயந்தி மற்றும் 4 வயது பெண் குழந்தை இருவரும் இன்று அதிகாலை விரிஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

போலீஸ் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்ல: திருச்சி சம்பவத்தால் மக்கள் பீதி!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரோத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய், மகள் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி