ஆப்நகரம்

4 கொரோனா நோயாளிகள் பலி?; திருப்பத்தூர் மருத்துவ அலுவலர் பேட்டி!

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை எனவும், இங்கு இறந்துபோன 4 பேரும் வெவ்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2021, 12:13 pm
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து, சிகிச்சைகள் பெற்று குணம் அடைந்து செல்கின்றனர்.
Samayam Tamil திருப்பத்தூர் அரசு மருத்துவமனை
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை


இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்தபடி உள்ளனர்.

இதனால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக தனி வார்டு அமைத்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களை விட சிறந்த முறையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சையில் முதன்மை பெற்று வருகிறது.

மனைவி வீட்டில் இல்லாததால்...; மகள் என்றும் பார்க்காத தந்தை!

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்து விட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன் கூறியதாவது:

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு இறந்ததாக கூறப்படும் விஷமங்கலம் பகுதியை சேர்ந்த மாது (63) என்பவர் மூளை சம்பந்தமான பிரச்சனை காரணமாக இறந்துள்ளார்.

ஆரியப் நகர் பகுதியை சேர்ந்த சாரியா (38) மற்றும் ஜெயசங்கர் தகர குப்பம் பகுதியை சேர்ந்த இருவருக்கு சிவியர் அக்வேட்ரஸ்பேரிட்டரி இன்பெக்சன் இருந்ததால் இறந்துள்ளனர். அதேப்போல் சின்னமூக்கனூர் பகுதியை சேர்ந்த சக்திகுமார் (40) என்பவர் நிமோனியா பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

ஆந்திராவில் ஊரடங்கு; கிருஷ்ணகிரியில் வாகனங்கள் நிறுத்தம்!

இதனை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரானா நோயாளிகள் இறந்துள்ளனர் என பொய் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்காக மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்து வரும் இந்த சூழ்நிலையில் இது போல் செய்தி வெளியிடுவது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி