ஆப்நகரம்

ஒரே இடத்தில் 25 ஆண்டு பணி; செவிலியருக்கு கிடைத்த பரிசு!

வேலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்றிய செவிலியர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 May 2021, 11:52 am
வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்திற்குட்பட்ட வள்ளலார், பேஸ் 1 ராஜிவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (52). இவர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25 ஆண்டுகளாக மேற்பார்வை செவிலியராக பணி செய்து வந்தார்.
Samayam Tamil பலியான செவிலியர் பிரேமா
பலியான செவிலியர் பிரேமா


இவரது கணவர் முரளி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்து விட்டார். தம்பதிக்கு கௌதம், நிரஞ்சன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பணியில் இருந்த பிரேமாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி பிரேமாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

போதையில் சித்தப்பா செய்த காரியம்; கிராம மக்கள் அதிர்ச்சி!

இதையடுத்து பிரேமா தான் பணியாற்றி வந்த அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நாளடைவில் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

கொரோனாவுக்கு மாமன், மச்சான் பலி; இந்த மாவட்டத்தில் இப்படி ஒரு சோகமா?

மேலும் தொற்று தீவிரமானதால் செவிலியர் பிரேமா கடந்த சில தினங்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் பணியாற்றி மக்களுக்கு சேவையாற்றிய செவிலியர் உயிரிழந்தது சக பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி