ஆப்நகரம்

சூட்கேசில் பச்சிளம் குழந்தை... போலீசார் அதிர்ச்சி!

பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை துணியால் சுற்றி ஓடை அருகே சூட்கேஸில் வைத்துவிட்டு சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 21 Oct 2021, 10:44 pm

ஹைலைட்ஸ்:

  • சூட்கேசில் பச்சிளம் குழந்தை.
  • முதலுதவிக்கு பிறகு சைல்டு ஹெல்ப்லைன் குழுவினரிடம் ஒப்படைப்பு.
  • இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பச்சிளம் குழந்தை
சூட்கேசில் பச்சிளம் குழந்தை
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த தப்பூர் கிராமம் அருகே உள்ள ஏரி ஓடைகால்வாய் கரையில் மூடப்பட்ட நிலையில் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர்.
அதில் பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். .மேலும் சூட்கேசில் நைட்டி, டவல் உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. இதுகுறித்து பாணாவரம் கிராம நிர்வாக அலுவலர் சுமனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகலறிந்து சம்ப இடத்துக்கு விரைந்து வந்த அவர் குழந்தையை பத்திரமாக மீட்டு, பாணாவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஜெயிலில் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்ற சாராய வியாபாரி மகன்... பதவியேற்க பெயில் கேட்டு மனு!

மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்பு குழந்தையின் கை மற்றும் கால் ரேகைகளை செவிலியர்கள் பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்த தகவல் மாவட்ட சைல்டு ஹெல்ப் லைனுக்கு தெரிவிக்கப்பட்டது.

பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு வந்த சைல்டு ஹெல்ப்லைன் குழுவினரிடம் போலீசார் முன்னிலையில் ஆண் குழந்தை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.


இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார்? எதற்காக குழந்தையை வீசி சென்றனா்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி