ஆப்நகரம்

சென்னை: சக போர்ட்டரைக் கல்லால் அடித்துக் கொன்ற தொழிலாளி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலித்தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த மற்றொரு கூலித்தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 3 Mar 2021, 11:35 am
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம் என்கிற ராஜா. இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் மற்றொரு கூலித்தொழிலாளியான குமார் என்கிற அழுக்கு குமார் என்பவருக்கும் இடையே கூலி தூக்குவது தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை மற்ற கூலித் தொழிலாளிகள் தடுத்து, அனுப்பி வைத்துள்ளனர்.
Samayam Tamil murder


பின்னர் மது அருந்திய பூங்காவனம் சென்ட்ரல் ரயில்நிலைய பயணிகள் காத்திருக்கும் பகுதியில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அழுக்குராஜா கையில் பெரிய கல்லை ஏடுத்துவந்து அங்கிருந்த பயணிகள் கண்முன்னே பூங்காவனத்தின் தலையில் அடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

உடனடியாக பூங்காவனத்தை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ராயில்நிலைய உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் விசாரிக்க சென்ற போது அங்கு பூங்காவனம் சுயநினைவின்றி இருந்ததால் அவரது விபரம் மற்றும் நடந்த சம்பவம் குறித்து மற்ற கூலித் தொழிலாளிகளிடம் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு; ஸ்டாலின் சரவெடி அறிவிப்பு!

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பூங்காவனம் உயிரிழந்தார். தலைமறைவாக உள்ள அழுக்கு ராஜாவை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர். அழுக்கு ராஜா பூங்காவனத்தை கல்லால் அடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி