ஆப்நகரம்

குண்டர் சட்ட கைதிகளுக்கு தபால் ஓட்டு: சிறைத்துறை தகவல்

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தபால் ஓட்டுப் போடு வசதியை ஏற்படுத்தியுள்ளதாக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Mar 2021, 3:29 pm
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.100சதவீதம் வாக்கு பதிவாக வேண்டும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Samayam Tamil goondas act


அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் வருகின்ற தேர்தலில் 100 சதவீத வாக்கு பதிவு செய்யும் வகையில் தபால் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள்,முதியவர்கள்,தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில்,குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள, 210 கைதிகள் தபால் மூலம் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வேலூர் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் குக் வித் கோமாளி சுனிதாவின் நடன வீடியோ

அவர்களில் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை தவிர தண்டனை மற்றும் விசாரணை கைதிகள், சட்டசபை தேர்தலில் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படவில்லை.தேர்தலின் போது அந்தந்த தொகுதி வேட்பாளர் பெயர் பட்டியல் சின்னத்துடன் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கைதிகள் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளரை தேர்வு செய்த பின்,சம்மந்தப்பட்ட தேர்தல் அலுலர்களுக்கு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி