ஆப்நகரம்

மணல் திருட்டு; ஊர் பொதுமக்கள் போராட்டம்!

திருப்பத்தூர் அருகே மணல் திருட்டை கண்டித்து ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 23 Jan 2022, 9:09 pm
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் தனிநபர்கள் மணல் அள்ளுவதை கண்டித்து ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil கோப்பு படம்


இலக்கிநாயக்கன் பட்டி ஊராட்சியில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கருக்கும் மேலான புறம்போக்கு நிலம் இருந்து வருகிறது. இந்த புறம்போக்கு நிலத்தில் பல வருடங்களாக சின்னசாமி, குள்ளப்பன், சங்கர், பெருமாள், சின்னவன் உள்ளிட்ட பல பேர் விவசாயம் செய்து அனுபவித்து வருகின்றனர்.

dmk candidates: interview with dmk candidates in tiruvallur - திருவள்ளூரில் திமுக சார்பில் நகராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு நேர்காணல்!, Watch Video | Samayam Tamil

இந்நிலையில் சின்னசாமி என்கிறவர் தான் அனுபவித்து வந்த சுமார் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் இருந்த மணல் மற்றும் மண்ணை அரசு அனுமதியின்றி எடுத்துச் சென்று விற்பதாக ஊர் பொதுமக்கள் குற்றச்சாட்டை எழுப்பினர்.

இதனால் அப்பகுதி முழுவதும் தற்போது மணல் குட்டைகளாக மாறி இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். இவ்வழியாக செல்லும் சிறுவர்கள், பெண்கள் கால் இடறி மணல் குட்டைகளாக தேங்கி இருக்கும் நீரில் முழ்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக கருதுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக மணல் அள்ளுவதற்கு தடை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தார். இதனையடுத்து கிராம பொது மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாய் காணப்பட்டது.

அடுத்த செய்தி