ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து விழுப்புரம் செல்லும் புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் எஸ்.5 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது, அவர் சேலம் மாவட்டம் சேவபேட்டை, பங்களா தெருவை சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவி என்பது தெரியவந்தது. விசாரணையில் முன்னுக்குபின்னாக பதில் தெரிவித்ததை தொடர்ந்து அவரிடமிருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
சினிமா சான்ஸ் கிடைக்க டைரக்டர் பொன்ராம் தரும் ஈசி டிப்ஸ்!
அதில், கட்டுக்கட்டாக பணம், வெள்ளி கட்டிகள் இருந்தன. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் ரவியிடம் இல்லை. இதையடுத்து, அவரிடமிருந்த 17 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த வெள்ளி கட்டிகள், பணத்துடன் ரவியை காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அங்கு வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது, அவர் சேலம் மாவட்டம் சேவபேட்டை, பங்களா தெருவை சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவி என்பது தெரியவந்தது. விசாரணையில் முன்னுக்குபின்னாக பதில் தெரிவித்ததை தொடர்ந்து அவரிடமிருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
சினிமா சான்ஸ் கிடைக்க டைரக்டர் பொன்ராம் தரும் ஈசி டிப்ஸ்!
அதில், கட்டுக்கட்டாக பணம், வெள்ளி கட்டிகள் இருந்தன. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் ரவியிடம் இல்லை. இதையடுத்து, அவரிடமிருந்த 17 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4¼ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த வெள்ளி கட்டிகள், பணத்துடன் ரவியை காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த போலீசார் அங்கு வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.