ஆப்நகரம்

வேலூர் சிறையில் நளினி முடிவு; போலீசார், கைதிகள் ஆச்சரியம்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனைப் பெற்று, வேலூர் பெண்கள் மத்திய சிறையில் 29 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிற, நளினி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கி உள்ளார். கைதி நளினியின் இந்த செயலை சிறைத் துறையினர் மற்றும் சக கைதிகள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Samayam Tamil 18 May 2021, 3:22 pm
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் அதிகமாக உள்ளது. இது, புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதனால் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்ஸ்களிலேயே உயிர் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
Samayam Tamil நளினி
நளினி


கொரோனா தடுப்பு பணிகள் ஒரு பக்கம் என்றால் அதை முன்னெடுப்பதற்கு தேவையான நிதி இல்லாதது மற்றும் அதை சமாளிப்பது திமுகவுக்கு இருக்கும் அடுத்த சவாலான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று சிறுவர், சிறுமிகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை நிதி கொடுத்து வருகின்றனர்.

அதன்படி திரை பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் என பலரும் தங்களால் முடிந்ததை நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் வழங்கி வருகின்றனர்.

கி.ரா.இல்லம் நினைவு நூலகமாக மாற்றம்?; தமிழிசை செளந்தரராஜன் திடீர் விளக்கம்!

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்திய சிறையில் 29 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நளினி கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரணம் வழங்கி உள்ளார்.

‘என்னை கேட்காமல் எதுவும் செய்ய கூடாது’; அதிகாரிகளை மிரள வைத்த திமுக எம்எல்ஏ!

அதாவது, தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து ரூபாய் 5 ஆயிரத்தை தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியாக வழங்க சிறை கண்காணிப்பாளரிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. நளினியின் இந்த செயலை சிறைத் துறையினர் மற்றும் சக கைதிகள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

அடுத்த செய்தி