ஆப்நகரம்

1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அப்டேட் நியூஸ்!

தமிழக அரசு நவம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளான ஒன்று முதல் எட்டு வரையிலான வகுப்புகளை திறப்பதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 26 Oct 2021, 10:05 pm
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil vellore news
கோப்புப்படம்


இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது, மாணவர்கள் எவ்வித தடங்கலுமின்றி சுகாதாரமான முறையில் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மை படுத்துவது பள்ளி முழுவதும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்துவது கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட அனைத்துவித அடிப்படை ஏற்பாடுகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பேரறிவாளனுக்கு மகிழ்ச்சியான செய்தி சொன்ன தமிழக அரசு!

ஆலோசனை கூட்டத்தின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர் அங்கு லட்சுமி, அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி நிர்வாகத்தினர் என பல அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி