ஆப்நகரம்

கரையைக் கடந்தது மாண்டஸ் புயல்; ராணிப்பேட்டையில் 6 மணி நேரமாக தட்டி எடுக்கும் மழை.. மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி!

மாண்டஸ் புயல் இன்று காலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 10 Dec 2022, 10:53 am
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை கடந்த 6 மணி நேரமாக தொடர்ந்து பெய்து வருகிறது.
Samayam Tamil ராணிப்பேட்டையில் 6 மணி நேரமாக தொடர்ந்து தட்டி எடுக்கும் மழை
ராணிப்பேட்டையில் 6 மணி நேரமாக தொடர்ந்து தட்டி எடுக்கும் மழை


வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று தமிழகத்தில் மூன்று தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கடற்கரையை ஓட்டி உள்ள மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந் நிலையில் தமிழக அரசின் உத்தரவின் படி அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்கள் நேற்று இரவு முதல் அதிகாலை வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ராணிப்பேட்டை பகுதியில் முகாமிட்டு இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இரவு முழுவதும் அனைத்து துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளதாகவும், எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இரவு நேர ரோந்து பணியின் போது தெரிவித்தார்.


இந்நிலையில் நேற்று இரவு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தது. மேலும் குளிர்ந்த காற்று சுமார் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வந்தது. இந்நிலையில் வங்க கடலில் உருவான புயல் இன்று அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று காலை மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்து மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பணிக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Breaking: மிரட்டும் மாண்டஸ்.. கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 940.50மிமி மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி