ஆப்நகரம்

முதல்வர் சொன்னது நடக்கும்: களமிறங்கிய ராணிப்பேட்டை கலெக்டர்!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி மஞ்சப்பை திட்டத்தினை செயல்படுத்தும் பட்சத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற நெகிழிகளை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 24 May 2022, 5:59 pm

ஹைலைட்ஸ்:

  • மீண்டும் மஞ்சப்பை இயக்கம்
  • நெகிழிகள் இல்லாத ராணிப்பேட்டை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ராணிப்பேட்டை கலெக்டர்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார்..
அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி மஞ்சப்பை திட்டத்தினை செயல்படுத்தும் பட்சத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற நெகிழிகளை முற்றிலுமாக தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்களின் தலைமையில் அனைத்து அரசுத் துறையினரும் இணைந்து பிளாஸ்டிக் போன்ற நெகிழிகள் இல்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என பிளாஸ்டிக் அகற்றும் பணி தொடங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் 3.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.

மீண்டும் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரடியாகச் சென்று மாவட்டம் முழுவதிலும் உள்ள பகுதிகளில் 27 டன் பிளாஸ்டிக் போன்ற நெகிழிகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பிளாஸ்டிக் போன்ற நெகிழி கழிவுகளை அகற்றுவதற்காக வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை அனைத்து பஞ்சாயத்துக்கள் பேரூராட்சிகள் நகராட்சிகளில் மாணவ மாணவியர் அரசு பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து பிளாஸ்டிக் போன்ற நெகிழிகளை பொது இடங்களில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

புறா தூதில் மலர்ந்த காதல்… குழந்தையுடன் பரிதவிக்கும் இளம்பெண்!
மேலும் மாவட்டத்தில் நடைபெற்ற தொடர் ஆய்வில் காரணமாக பிளாஸ்டிக் போன்ற நெகிழியின் பயன்பாடு கட்டுக்குள் கொண்டுவர பட்டிருப்பதாகவும் மேலும் தொடர்ந்து அனைவரும் ஒத்துழைக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக் போன்ற நெகிழிகள் முழுவதும் இல்லாத முதல் மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி