ஆப்நகரம்

பாமகவினர் திடீர் உற்சாகம்; மரம் நட்டு கொண்டாட்டம் !

வேலூர் மற்றும் அன்பூண்டியில் பசுமை தாயகம் நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு இனிப்புகளை வழங்கி பாமகவினர் கொண்டாடினர்.

Samayam Tamil 25 Jul 2021, 1:03 pm
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவிக நகரில் பசுமை தாயகம் நாளை முன்னிட்டு இன்று பாமக கொடியினை மாநில துணை பொதுசெயலாளர் இளவழகன் ஏற்றி வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி.சண்முகம் இனிப்புகளை வழங்கி மரக்கன்றுகளை நட்டார்.
Samayam Tamil மரக்கன்று நட்டு வைக்கப்படுகிறது
மரக்கன்று நட்டு வைக்கப்படுகிறது


இதேபோன்று அன்பூண்டியிலும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பொதுமக்கள் சார்பில் பசுமை தாயகம் நாள் கொண்டாடப்பட்டது. இதிலும், மரக்கன்றுகளை மாநில துணை பொது செயலாளர் இளவழகன் மரக்கன்றுகளை நட்டார்.

ஒருங்கிணைந்த சலவை வளாகம்; ‘மாஸ்’காட்டிய மாவட்ட கலெக்டர்!

மேலும் பள்ளி வளாகத்திலும் 30க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ரவி, வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கமலக்கண்ணன், ஜலகண்டன் வெங்கடேசன், இளங்கோ உள்ளிட்ட பாமக வினரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி