கொரோனா; தமிழக எல்லையில் உஷார்!
கொரோனா காரணமாக தமிழக எல்லைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil 22 Apr 2021, 11:09 am
கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பகல் நேரங்களில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிறுமி உயிரை குடித்த பிரியாணி!
ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வரக்கூடிய கார்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்றும், குறிப்பாக தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு அதன் பின் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முகக்கவசம் அணியாமல் காரில் வருபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தும், முகக்கவசம் அணியும்படி எச்சரித்தும் அனுப்பி வருகின்றனர். மேலும் காலை நேரங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிறுமி உயிரை குடித்த பிரியாணி!
ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வரக்கூடிய கார்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் வருவோர் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்றும், குறிப்பாக தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு அதன் பின் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முகக்கவசம் அணியாமல் காரில் வருபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தும், முகக்கவசம் அணியும்படி எச்சரித்தும் அனுப்பி வருகின்றனர். மேலும் காலை நேரங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.