ஆப்நகரம்

Online Rummy: ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை; அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Jun 2022, 7:47 am
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள சேனூரில் பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பகுதி நேர கடையை திறந்து வைத்ததோடு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Samayam Tamil durai murugan


இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், கூட்டுறவு இணை இயக்குநர் குண ஐயப்பதுரை, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: -
"மேகதாது அணை விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை வாரிய ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆணையத்தில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. இது தவறானது, ஏற்கனவே பலமுறை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை என ஆணையம் கூறியது ஆனால் தற்போது தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுவது கண்டிக்கதக்கது.
மலைவாழ் மக்களுக்கு சாதி சான்று... திருப்பத்தூரில் சிறப்பு முகாம்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். மேலும், இதில் மத்திய அரசின் ஆதரவில்லாமல் இவர்கள் பேசமாட்டார்கள். இதில் ஒன்றிய அரசின் சூழ்ச்சி உள்ளது. இதுகுறித்து ஆணையத்தில் விவாதிக்க அதிகாரமில்லை. இதுகுறித்து விவாதித்தால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும் என்றார்.

ஆன்லைன் சூதாட்டம் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், ஆன்லைன் சூதாட்டம்(online gambling) தடை செய்யபட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தல்ல. அதனை தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். தமிழகம் முழுவதும் அங்கன்வாடியில் செயல்பட்ட எல்கேஜி யுகேஜி மூடியது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறினார்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நதிகள் ஆறுகள் ஏரிகள் நீர்நிலைகள் போன்றவற்றில் நீர் வளத்துறை மூலம் கணக்கீடு செய்கிறோம். நீர்நிலைகள் குறித்து முழுமையான கணக்கீடு வந்தால் அது நமக்கு பயனுள்ளதாக அமையும்" என்று கூறினார்.

அடுத்த செய்தி