ஆப்நகரம்

கொரோனாவுக்கு மாநகராட்சி அதிகாரி பலி; இந்த மாவட்டத்தில் அடுத்தடுத்து இப்படியா?

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் பணியாற்றி வந்த வருவாய் ஆய்வாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். வேலூரில் மாநகராட்சி அதிகாரி கொரோனாவால் பலியான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 11 May 2021, 8:51 am
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil பலியான பாலச்சந்திரகுமார்
பலியான பாலச்சந்திரகுமார்


கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 600ஐ கடந்து வந்தது. இந்நிலையில் நேற்று கொஞ்சம் குறைந்து 583 ஆக இருந்தது. ஆனாலும் இன்று வேலூர் மாவட்டத்தில் 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் பரிசோதனை குறைவாக செய்யப்பட்டது. இதனால்தான் பாதிப்பும் குறைவாக உள்ளது. இன்றும் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

வேலூர் சத்துவாச்சாரி மவுண்ட் வியூ அப்பார்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரகுமார் (52). வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் மீது வழக்கு: இது அதிரடிக்கான தொடக்கமாம்!

கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது‌ இதனையடுத்து காட்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்தனர். நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இதனை தொடர்ந்து பாலச்சந்திர குமாரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பாலச்சந்திரகுமார் பரிதாபமாக இறந்தார். வேலூரில் மாநகராட்சி அதிகாரி கொரோனாவால் பலியான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி