ஆப்நகரம்

துர்நாற்றம் வீசும் கழிவுகள்; கையால் அகற்றும் பணியாளர்!

துர்நாற்றம் வீசும் கழிவுகளை கைகளால் ஊழியர் அகற்றிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 23 Apr 2021, 2:14 pm
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் மட்டும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 24 வார்டுகள் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் மூலம் தூய்மை பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Samayam Tamil வெறும் கையால் கழிவுகளை அகற்றும் ஊழியர்.
குடியாத்தம் நகராட்சியில் வெறும் கையால் கழிவுகளை அகற்றும் ஊழியர்.


தூய்மைப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான பாதுகாப்பு கவசங்கள் ஏதுமின்றி பணியில் ஈடுபடுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் மீது ஊழியர்கள் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம்; ‘ஏட்டு ஏகாம்பரம் சர்க்கிளில்’ எதுவும் நடக்கும்!

இந்த நிலையில்,குடியாத்தம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் நகராட்சி தூய்மையை பணியாளர் ஒருவர் பாதுகாப்பு கவசம் இல்லாமல் கைகளால் கழிவுகளை அகற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயில் இறங்கியோ, செப்டிங் டேங்க், பாதாள சாக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இறங்கி வெறும் கையால் கழிவுகளை சுத்தம் செய்ய கூடாது என சட்டம் உள்ளது.

உறவினர் வீட்டில் காதணி விழா; தம்பதி விபரீத முடிவு!

பாதுகாப்பு கவசங்கள் ஏதுமில்லாமல் இதுபோன்ற துய்மை பணியில் ஈடுபடுத்தும் நகராட்சி ஆணையர் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. உரிய பாதுகாப்பு கவசங்களை வழங்கி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி