ஆப்நகரம்

கொரோனாவுக்கு நர்ஸ் பலி; இந்த மாவட்ட மக்கள் சோகம்

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள வள்ளலார் நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனை செவிலியர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 9 Jun 2021, 12:40 pm
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள, வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி (51). வேலூரிலுள்ள அரசினர் பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் கொரோனா வார்டிலும் பணி புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil பலியான நர்ஸ்
பலியான நர்ஸ்


இந்த நிலையில் செவிலியர் சாந்தகுமாரி கடந்த சில தினங்களுக்கு முன்னர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றி வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தம்பியுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி அடாவடி; அதிமுக ஒன்றிய செயலாளர் திடீர் குற்றச்சாட்டு!

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காததால் செவிலியர் சாந்தகுமாரி பலியானார். செவிலியர் கொரோனா தொற்றுக்கு பலியான சம்பவம் சக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி