ஆப்நகரம்

Organ donation: வேலூர் டூ சென்னை பறந்த பெண்ணின் இதயம், கண்கள்.. திக் திக் நிமிடங்கள்!

திருவண்ணாமலை அருகே விபத்தில் படுகாயமடைந்த பெண் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Samayam Tamil 5 Sep 2022, 7:36 am
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி (வயது 46). இவரது கணவர் முருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 2 பெண் பிள்ளைகளுடன் கலைச்செல்வி கூலி வேலை செய்து படிக்க வைத்து வந்துள்ளார்.
Samayam Tamil வேலூர் அரசு மருத்துவமனை


இந்த நிலையில், கலைச்செல்வி கடந்த 1-ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்துச் சென்ற போது பின்பக்கம் வந்த இருச்சக்கர வாகனம் கலைச்செல்வி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை மீட்ட பொதுமக்கள் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இதனால், சோகத்தில் ஆழ்ந்த அவரது குடும்பத்தினர், சேவை நோக்குடன் கலைச்செல்வியின் இதயம் உட்பட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதற்கான அறுவை சிகிச்சை அதே மருத்துவமனையில் நடைபெற்றது.
அதிமுகவில் மாற்றம்.. அண்ணன் ஓபிஎஸ்.. இபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த கே.பி.முனுசாமி!

இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், வலது சிறுநீரம் வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல், இரண்டு கண்கள் சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதல் முறையாக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உடல் உறுப்புகள் மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பின்னர் ’சென்னையில் ஒரு நாள்’ திரைப்பட பாணியில் வேலூர் முதல் சென்னை வரை போக்குவரத்து சீர்செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடல் உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. மின்னல் வேகத்தில் பறந்து சென்ற ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் ஒத்துழைப்பு வழங்கினர்.

அடுத்த செய்தி