ஆப்நகரம்

மாமியாருன்னு கூட பார்க்காததால்.... மருமகன் அடித்துக்கொலை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாமியார் என்றும் பார்க்காததால் மருமகன் அடித்து கொலை செய்யப்பட்டார்.

Samayam Tamil 24 Apr 2021, 11:04 am
திருப்பத்தூர் மாவட்டம் கவுண்டப்பனூர் அடுத்த வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (38). இவரது மனைவி மகேஸ்வரி (29). இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil கொலை சம்பவத்தை விளக்கும் படம்
கொலை சம்பவத்தை விவரிக்கும் கருத்து படம்


சுதாகர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மகேஸ்வரி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கணவனை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

கால் முறிந்தும் கருணை காட்டாத ஆம்புலன்ஸ்!

நேற்று முன்தினம் இரவு சுதாகர் மது குடித்துவிட்டு மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மகேஸ்வரியை சரமாரியாக சுதாகர் தாக்கி உள்ளார். அப்போது மகளை தடுக்க வந்த தாயையும் சுதாகர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த ஈரோட்டில் இருந்த மகேஸ்வரியின் தந்தை சீனிவாசன் இரவோடு இரவாக ஊருக்கு வந்துள்ளார்.

பின்னர், சுதாகர் வீட்டிற்கு சென்று, ‘ஏன் எனது மகள் மற்றும் மனைவியை அடித்து துன்புறுத்தினாய்’ என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பச்சரிசி மலையில்.... அதுவும் பெண் தாசில்தார்!

பின்னர், சீனிவாசன் அருகில் இருந்த இரும்பை எடுத்து சுதாகரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் சுதாகரை மீட்டு தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று இரவு சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

அடுத்த செய்தி