ஆப்நகரம்

இரவில் சீட்டு விளையாட போறீங்களா?; இத படிச்சு பார்த்துட்டு முடிவு பன்னுங்க!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கட்டிட மேஸ்திரி உள்ளிட்ட பலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்ற வாகனத்தை பார்த்து போலீஸ் வருவதாக நினைத்து தப்பியோடியபோது கிணற்றில் விழுந்து கட்டிட மேஸ்திரி இறந்தார்.

Samayam Tamil 16 Jun 2021, 12:14 pm
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சாமியார்மலை, எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (38). கட்டிட மேஸ்திரி. ஊரடங்கால் வேலை இல்லாததால் வீட்டில் இருந்து வந்தார்.
Samayam Tamil பலியான கட்டிட மேஸ்திரி
பலியான கட்டிட மேஸ்திரி


இதனால் சிவக்குமார் குடியாத்தம் கன்னித்தோப்பு பின்புறமுள்ள ஒரு தோப்பில் சீட்டு விளையாடுவதை வேலையாக கொண்டுள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் தோப்பில் சீட்டு விளையாட சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை கண்ட சிவக்குமார் போலீஸ் என நினைத்து அந்த இடத்தில் இருந்து ஓடியுள்ளார். உடன் விளையாடிவர்களும் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரமாகியும் சிவக்குமார் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். உறவினர்கள் மற்றும் நபர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து அருகில் உள்ள கிணற்று நீரில் சிவக்குமாரின் செருப்பு மிதந்துக் கிடப்பதை உறவினர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து ஒரு மணி நேரம் போராடி சேற்றில் சிக்கியிருந்த உடலை மீட்டனர். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேட்டையால் சிக்கிய சாட்டை துரைமுருகன்; தொடர் வழக்குகளால் விடுதலையில் சிக்கல்!

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் போலீஸ் என நினைத்து ஓடிய போது கிணற்றில் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி சிவக்குமார் உயிரிழந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி