ஆப்நகரம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் காணிக்கை இவ்வளவா?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்திய சித்ரா பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 24 May 2023, 9:14 am

ஹைலைட்ஸ்:

  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
  • அந்தப் பணி நேற்று காலை முதல் துவங்கி இரவு வரை நடைபெற்றது
  • அதிக அளவில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Thiruvannamalai annamalaiyar temple hundi counting
திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குகிறது. அதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருவர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மிகவும் பிரசித்தி வாய்ந்த கோயில் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இன்னும் சில வெளிநாட்டவர்களும் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து. அண்ணாமலையாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

அன்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வைகாசி மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை நடைபெற்றது. அப்போது அண்ணாமலையார் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன் முன்னிலை வகித்தார். மேலும் சில கோயில் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.



அப்போது சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 120 பேர் உண்டிகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அந்த உண்டியலை எண்ணும் பணியானது நேற்று காலை துவங்கி இரவு 7 மணி வரை நடைபெற்று முடிவடைந்தது.

ராமநாதபுரம்: கடலுக்குள் கடல் அட்டைகள் பதுக்கல் - மெரைன் போலீசார் அதிரடி

அதில் 2 கோடியே 16 லட்சத்து 4 ஆயிரத்து 221 ரூபாய் ரொக்க பணம் இருந்துள்ளது. மேலும் 165 கிராம் தங்கமும் 2213 கிராம் வெள்ளியும் இருந்துள்ளது.

தூத்துக்குடி ஜல் ஜீவன் மிஷன் - அடிக்கல் நாட்டிய கனிமொழி எம்பி

அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்ததால் அதிக அளவு காணிக்கை பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி