ஆப்நகரம்

கலெக்டர் ஆஃபீஸ் முன் இது இந்து நாடு என பிள்ளையார் சிலையோடு போராட்டம்: வேலூரில் பெரும் பதற்றம்!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபட முயற்சி இந்த நாடு இந்து நாடு என முழுக்கமிட்டு போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 10 Sep 2021, 7:16 pm
நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு திருமணம், திருவிழா மற்றும் மத ஊர்வலங்கள் நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஒவ்வொரு மாநில அரசும் அறிவித்து வருகிறது.
Samayam Tamil கலெக்டர் ஆஃபீஸ் முன் இது இந்து நாடு என பிள்ளையார் சிலையோடு போராட்டம்: வேலூரில் பெரும் பதற்றம்!


விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்குத் தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு தடை விதித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது என்றும் அவரவர் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகளை வைத்து வழிபாடு நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் சார்பில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த முயன்றனர்.

அதனை தடுத்து நிறுத்திய போலீசார் விநாயகர் சிலையை பறிமுதல் செய்து இந்து முன்னணியைச் சேர்ந்த 50- பேர் போலீசார் கைது செய்தனர்.

40 கோடி செலவில் முக ஸ்டாலின் அரசு கட்டும் அணை, ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு!
போலீசார் இந்து முன்னணியினரை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றபோது போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை இந்து முன்னணியினர் எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அடுத்த செய்தி