ஆப்நகரம்

செங்கத்தில் கோர விபத்து... 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நிகழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

Samayam Tamil 1 May 2022, 7:29 am
தருமபுரியில் இருந்து சுற்றுலா சென்ற வேன் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் ஆவின் பால் பண்ணை அருகே சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த பைக்கும், வேனும், நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
Samayam Tamil tiruvannamalai accident


இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொரப்பாடி பகுதியை சேர்ந்த பரமசிவம்(46), பிரபு(30) மற்றும் மணி(45) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா வேன் சாலையோரத்தில் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

சம்பவ இடத்திற்கு சென்ற பாய்ச்சல் காவல்நிலைய போலீசார் படுகாயமடைந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த மூவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி