ஆப்நகரம்

சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது கார் மோதி விபத்து; மூன்று மாணவர்கள் பலி

திருப்பத்தூர் அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 Feb 2023, 4:59 pm
திருப்பத்தூர், வாணியம்பாடியில் அதிவேகமாக வந்த கார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதியதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tirupathur accident


வாணியம்பாடி அருகே வளையம்படு பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சென்னையில் இந்து பெங்களூர் நோக்கிச் கார் ஒன்று அதிவேகத்துடன் வந்துகொண்டிருந்தது. அந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சர்வி சாலையில் மிதிவண்டிகளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீது மோதியது. இதில் கிரி சமுத்திரம்பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ரபீக், விஜய், சூர்யா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி